எல்லோர்க்கும் தெரிந்த பழங்கதை ஒன்று உண்டு. ஒரு காட்டில் ஒரு திருடன் தங்கி அந்த வழியாக வருவோர் போவோர் எல்லோரிடமும் வழிப்பறி செய்துவிட்டு, கட்டிய துணியோடு மட்டும் துரத்தி விடுவானாம். அவனை திட்டாத,சபிக்காத ஆட்களே அந்த பகுதியில் எவருமே இல்லை. அந்த திருடனுக்கும் வயதாகிவிட்டது. அதனால் அப்பாவைத் தொடர்ந்து மகன் வழிப்பறி செய்ய தொடங்கினான், அவனுடைய அப்பன் படுக்கையில் சாகும் தருவாயில் கிடந்த போது மகனை அழைத்து 'மகனே, என்னை திட்டாத ஆளே இங்கில்லை. ஆனால் இனி கொஞ்ச நாளில் சாகப்போறேன். இந்த கொஞ்சநாளிலாவது என்னை பாராட்ட வேண்டும். அதுக்கு நீதாண்டா ஏதாவது செய்யனும்னு கெஞ்சினான்........................................ அன்று முதல் அந்த மகன் வழிப்பறி செய்ததோடு மக்களோட துணியை கூட விடாமல் உருவி விட்டான். பாதிக்கப்பட்ட மக்கள் அடேங்கப்பா இவன் அப்பனே தேவலாம், புண்ணியவான், மானத்தோடாவாவது அனுப்பினான். இந்த பயலுக்கு அவங்கப்பன் நல்ல மனுசன் தான்.................. என பேச துவங்கி விட்டார்கள்........................ தகப்பன் - 6th PAY Commission, மகன்-7th PAY Commission.
No comments:
Post a Comment