அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Monday 31 July 2017

பணி ஒய்வு பாராட்டு!!!!!!!!!

நாகப்பட்டினம் பகுதி அஞ்சல் மூன்றின் செயல் வீரரூம், கீழையூர் துணை அஞ்சலக தலைவருமான திரு.K.செளந்தர்ராஜன், அவர்கள் இன்று 31.07.2017 பணி ஒய்வு பெறுவதால், எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கிறோம்.

வாழ்த்துக்களுடன்
NFPE-P3,P4 & GDS

நாகப்பட்டினம் & திருவாரூர்

Wednesday 19 July 2017

வருந்துகிறோம்!

நாகை கோட்ட NFPE-GDS சங்கத்தின் தலைவரும், திருக்கண்ணங்குடி கிளை அஞ்சலக தலைவருமான திரு.M.வீரமணி அவர்கள் நேற்று இயற்கை எய்திவிட்டார்கள். அன்னாரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம்

NFPE-P3, P4 & GDS

Sunday 2 July 2017

ஜூலை 1
புதிய இன்கிரிமெண்ட் குள் நுழைகிறோம் .
GST எனும் வரி சவுக்கடி களை வா(தா) ங்கதான்   போகிறோம் 
போராட்ட களத்தை இழந்துவிட்டு   நிராயுதபாணியாய்
அலவன்சுகள் எனும் பெயரில் அரசாங்கத்தின் அசைந்து
கொடுக்காத நிலையினை ஏற்று கொள்ள போகிறோம்    
மீண்டும் வட்டி குறைப்பு இருந்தாலும் வரிந்துகட்டி கொண்டு 
புதுக்கணக்குகளை தொடங்க அச்சுறுத்த படப்போகிறோம் 
பேச்சுவார்த்தைக்கு கூட வரமறுக்கும் நிர்வாகத்தை எதிர்த்து 
அவசர அவசரமாக போராட போகிறோம் 
 அரசாங்கத்தின் துரோகத்தை மறந்து ஏனோ 
திசைமாறி வசைபாடி கொண்டிருக்கிறோம் 
பொறுமை காத்து --யாருக்கோ 
பெருமை சேர்க்கிறோம் 
பொங்க வேண்டிய நேரத்தில் எதற்கோ 
மங்க தொடங்கிவிட்டோம் 
புரட்சிகளை மறந்து விட்டு 
பொதி சுமக்க பழகி விட்டோம் 
இருந்தாலும் 
இறுதி வெற்றி நமதே என்றே 
இனிய வரிகளை உச்சரித்தே 
உறுதி காக்கிறோம் --இயக்கங்களின் 
உயர்வை பார்க்கிறோம் 
ஜூலை வா ! கொடுமைகளை எரிக்க எங்களுக்கு 
அக்கினி ஜுவாலைகளை தா !தா !

S.MEENAKSHI SUNDARAM
DIVISIONAL SECRETARY,
NAGAPATTINAM